ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் – திருமாவளவன் ..!

Published by
murugan

ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்தவர் இளவரசன், செல்லம்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா இருவரும் காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திவ்யா வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால் திவ்யாவை வீட்டுக்கு வருமாறு பெற்றோர் அழைத்தனர். திவ்யா வர மறுத்ததால் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், காதல் மனைவியை அடைய இளவரசன் ஐகோர்ட்டை நாடினார் இளவரசன். அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது தனது தாயாருடன் செல்வதாக திவ்யா தெரிவித்தார். பின்னர், 2013-ம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இளவரசன் தரப்பினர் இது கொலை என தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தரும்புரி இளவரசன் நினைவிடத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தொல்.திருமாவளவன் தனது ட்விட்டரில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இணையருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் உரிய சட்டமியற்ற வேண்டும். இந்திய, தமிழக ஆட்சியாளர்களுக்கு விசிக இந்நாளில் வேண்டுகோள் விடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

22 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

1 hour ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

3 hours ago