சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்.
கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான படகுகளில் கருப்பு கோடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்த இடத்திற்கு 5,00 போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…