சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரதநாட்டிய ஆசிரியர் கைது..!

Published by
murugan

சென்னை ஆவடி அடுத்த உள்ள கிறிஸ்து காலனியில் அன்னை தெரசா 3-வது காலனியை சார்ந்த ரவிவர்மா (53).இவர் கடந்த 6 வருடமாக தனது வீட்டில் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.
இவரது நாட்டியபள்ளியில் அதே பகுதியை சார்ந்த 11 வயது சிறுமி ஒருவரும் பரதநாட்டிய பள்ளி பயின்று வந்து உள்ளார்.கடந்த 29-ம் தேதி பரதநாட்டிய பள்ளிக்கு வந்த அந்த சிறுமியை ரவிவர்மா தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் பரதநாட்டிய பள்ளிக்கு செல்லமாட்டேன் என கூறி அழுது உள்ளார்.அப்போது சிறுமியிடம் ஏன் என விசாரித்தபோது தனக்கு ரவிவர்மா பாலியல் தொந்தரவு கொடுத்ததை கூறினார்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் உட்பட 50 க்கும் மேற்பட்டோர்  பரதநாட்டிய பள்ளியை முற்றுகையிட்டு ரவிவர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ரவிவர்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தனர்.அவர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு விட்டார்.
இதை தொடர்ந்து ரவிவர்மாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் ரவிவர்மாவை அடைத்தனர்.

Published by
murugan

Recent Posts

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

18 minutes ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

2 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

4 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

5 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

6 hours ago