சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் பங்கேற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக – பாஜக போட்டியிடும் இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடைய, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசியிருந்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்ற கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அதனை உறுதி செய்தது.
இந்த சூழலில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே எந்தெந்த இடங்களில் போட்டிடுவது என பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…