சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பாஜக தரப்பில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் பங்கேற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக – பாஜக போட்டியிடும் இடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடைய, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து பேசியிருந்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்ற கூறப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு அதனை உறுதி செய்தது.
இந்த சூழலில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- பாஜக இடையே எந்தெந்த இடங்களில் போட்டிடுவது என பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…