Thoothukudi Firing Case - Madras High Court [File Image]
Thoothukudi Firing : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.? என உயர்நீதிமன்றம் கேள்வி.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது , கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் இந்த போராட்டம் மாபெரும் பெரும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், 21 பேர் மீது குற்றம் சாட்டியது. 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய் துறை அதிகாரிகள், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அதில், இதுவரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்றபடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தநிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றம் சட்டபட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதனை அடுத்து, வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தமிழக அரசு அறிக்கையாக தயார் செய்து அதனை மனுதாரருக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துவிட்டது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…