திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக திருச்சியில் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கையில், ‘திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை மறந்து தற்போது மதுரையை இரண்டாவது தலைநகரம் மாற்றுவோம் என கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம்.
ஜாதி மதம் என கலவரம் இல்லாத பூமி திருச்சி. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சை அமைச்சர்கள் எதற்காக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும். அடுத்த சில வாரங்களில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இந்த பிரச்சினை குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது.’ எனவும் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…