எம்ஜிஆர் கூற்றை தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர்.! – வியாபாரிகள் கூட்டமைப்பினர் வருத்தம்.!

Published by
மணிகண்டன்

திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர்.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக திருச்சியில் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கையில், ‘திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை மறந்து தற்போது மதுரையை இரண்டாவது தலைநகரம் மாற்றுவோம் என கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம்.

ஜாதி மதம் என கலவரம் இல்லாத பூமி திருச்சி. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சை அமைச்சர்கள் எதற்காக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும். அடுத்த சில வாரங்களில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இந்த பிரச்சினை குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது.’ எனவும் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

19 minutes ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

41 minutes ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

1 hour ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…

2 hours ago

‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…

2 hours ago