மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு.
மதுரை புதுநத்தம் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.545 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக கட்டுமான நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேம்பாலம் இடிந்த விபத்தில் ஜேஎம்சி நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. 80% கட்டுமான பணி முடிந்த நிலையில், மேம்பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…