மதுரையில் மேம்பாலம் இடிந்த விபத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிப்பு.
மதுரை புதுநத்தம் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.545 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக கட்டுமான நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேம்பாலம் இடிந்த விபத்தில் ஜேஎம்சி நிறுவனத்திற்கு ரூ.3 கோடியும், கட்டுமான ஆலோசனை நிறுவனத்திற்கு ரூ.40 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. 80% கட்டுமான பணி முடிந்த நிலையில், மேம்பாலம் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறையால் நியமிக்கப்பட்ட 6 கண்காணிப்பு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…