மதுரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில், 20 லட்சம் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மட்டுமல்லாமல், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் தற்பொழுது வரையும் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை நகரை கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் மதுரையை சார்ந்ததாகவே மாறிப் போயிருக்கும் நிலையில் மதுரையில் உள்ள மக்கள் தற்பொழுது பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக அமைந்து தற்போது வரை இருப்பதாகவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அது மட்டுமல்லாம், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை பலதரப்பு சார்பில் கொடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் செயல்முறை படுத்தப்படாததால் போக்குவரத்து நெருக்கடியில் சென்னைக்கு அடுத்து மதுரை இருப்பதாகவும் ரமேஷின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு மத்திய, மாநில அரசுகள் மதுரை மெட்ரோ ரயில் சேவை குறித்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…