மகளிர் உரிமைத் தொகை.. தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் SMS.. அரசு அதிகாரிகள் தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி வரும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் வருகிறது.

இதனிடையே, மகளிர் உரிமைத்தொகை குடும்ப தலைவர்களுக்கு அனைவருக்கும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதியுள்ளவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கு மட்டும் திமுக அரசு வழங்கி வருகிறது எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தனர். இதனால், குடும்ப தலைவி அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்… இந்தியர்களுக்கு 3ஆம் இடம்.!

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்வதற்கு அக்.25ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், 11.85 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். எனவே தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

57 seconds ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

29 minutes ago

15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…

44 minutes ago

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டிய வழக்கு : 4 பேரை அதிரடியாக கைது செய்த NIA!

சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…

1 hour ago

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…

2 hours ago

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

11 hours ago