பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம் : திமுக எம்எல்ஏ மகனை பிடிக்க 3 தனிப்படைகள்.!

Published by
மணிகண்டன்

பல்லாவரம் திமுக எம்.பி கருணாநிதி மகன் ஆண்டோ மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சிறுமியை இவர்கள் அதிகமாக வேலை வாங்கியதாகவும்,  வேலை செய்யவில்லை என்றால் கடுமையாக தாக்கியதாகவும் சிறுமி வீடியோ மூலம் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து நீலாங்கரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிறுமியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து நேரடியாக வாக்குமூலம் பெற்றனர். அதற்கு கடந்த 6,7 மாதங்களுக்கு மேலாக அவர்கள் துன்புறுத்தியதாக கூறினார்.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

சிறுமி வாக்குமூலத்தை அடுத்து ஆண்டோ, மெர்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி,  தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தனது மகனுக்கு 7 வருடம் முன்பு திருமணம் ஆகி தனியே வசித்து வருகிறார் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. சட்டம் கடமையை செய்யும் என தனது தரப்பு விளக்கத்தை தனியார் செய்தி சேனல்கள் வாயிலாக அளித்து இருந்தார்.

சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், சரியாக வேலை செய்யவில்லை என கூறி அடித்து துன்புறுத்தியதாகவும் பல்வேறு சம்பவங்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணைக்கு ஆஜராக ஆண்டோ மற்றும் மெர்லினாவை காவல்துறை கூறியதாக தெரிகிறது.

ஆனால், தற்போது ஆண்டோ மற்றும் மெர்லினா எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என்பதால், தலைமறைவாக இருக்கும் ஆண்டோ, மெர்லினாவை பிடிக்க 3 தனிப்படைகளை நீலாங்கரை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

38 minutes ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

1 hour ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

2 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

3 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

3 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

4 hours ago