முரசொலி விவகாரம் : ராமதாஸ் உள்ளிட்ட இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் – திமுக

Published by
Venu
  • முரசொலி விவகாரம் குறித்து பாமக நிறுவனர்  ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

முரசொலி  இடம் பஞ்சமி நிலம்  என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் , பாஜகவின் சீனிவாசனும் கூறியதை எதிர்த்து  எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஆவணங்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  செய்தியாளர்களிடம் பேசுகையில், முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என அவதூறாக பேசியதற்கு எதிராக முரசொலியின் அறங்காவலர் என்ற முறையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜகவின் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பினோம்.ஆனால்  இருவருமே பதிலளிக்காததால்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம்.முரசொலி இடம் குறித்து அவதூறு பரப்பிய ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கௌரவம் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர்கள் இருவரும் கவுரவம் பார்க்காமல், ஆணவம் பார்க்காமல், திமிரு பிடிக்காமல் தங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினால் திமுக தலைவர் ஸ்டாலின்அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று தெரிவித்தார்.

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago