மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தடை.., ஸ்டாலின் எதிர்ப்பு..!

அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவிதத்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளித்த புகாரின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் மம்தா பானர்ஜிக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு சார்பின்மை, நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நியாயமான, நேர்மையான தேர்தல்களில் தான் நிலைகொண்டுள்ளது என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025