தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட எண்ணி வாளால் கேக் வெட்டிய நபர் கைது!

Published by
Rebekal

திருப்பூரில் தனது பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே வாள் வைத்து பிறந்தநாள் கேக் வெட்டுவது வழக்கமாகிவிட்டதுடன், இது வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என போலீசார் எச்சரிக்கை செய்வதும், தவறு எனவும் சுட்டிக் காட்டப்பட்டும் வருகிறது. மேலும், தொடர்ந்து அவ்வாறு செய்யக் கூடியவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தினை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய அவரது நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி சதீஷ்க்கு கேக்குகள் வாங்கி அவரை வாளால் கேக் வெட்ட கேட்டுள்ளனர். அவரும் வாள் வைத்து தைரியமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ஆனால் கூடியிருந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூச்சலிட்டு அந்த இடத்தில் மிகவும் கும்மாளம் போட்டுக் கொண்டிருப்பதை அருகில் இருந்தவர்கள் எச்சரித்தும் கேட்காத நிலையில், சிலர் மாடியிலிருந்து வாளால் கேக் வெட்டியதை போட்டோ எடுத்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய சதீஷை கைது செய்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

6 minutes ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

58 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

3 hours ago