சென்னை விருகம்பாக்கத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்லும் நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மே 10ஆம் தேதி முதல் வருகிற 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவும் தமிழ்நாடு முழுவதிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கின் போது சுற்றுலாத்தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மால்கள், மதுபான கடைகள் என அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மார்க்குகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அனைவரும் பெரும் வேதனையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை நாராயணசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அந்த வீட்டில் இருந்த விலை உயர்ந்த பல மதுபாட்டில்கள் உட்பட மொத்தம் 2,198 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 2,198 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…