பிச்சைக்காரர் அருகில் அமர்ந்து, தெருநாயுடன் பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்…!

Published by
லீனா

தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

கடந்த முறை திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூரலிகான், அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் இம்முறை தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்தேச புலிகள் என்ற கட்சியைத் தொடங்கி கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் அவர், இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு எழுதிக் கொண்டார். அப்போது கோவில் அருகே இருந்த கடை வியாபாரிகளை  சந்தித்து தொகுதியில் உள்ள குறைகள் பற்றி கேட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, பேரூர் கோவில் எதிரே குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பிச்சைக்காரரின் பக்கத்தில்அமர்ந்து யார் இதை சுத்தம் செய்ய உதவும் அதிகாரி  என்றவாறு அங்கே படுத்திருந்த தெருநாயிடம், நீ குப்பையை போட்டாயா என நாயிடம் பேசிக்கொண்டிருந்தார். பின் அந்த வழியாக வந்த பொதுமக்களிடமும் அவர்களது முகவரி மற்றும் தொகுதி குறைகள் குறித்து கேட்டு எழுதி வைத்துக் கொண்டார். மக்கள் மத்தியில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மன்சூர் அலிகான் செய்து வரும் இந்த வித்தியாசமான பிரச்சாரம் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…

49 minutes ago

டாஸ்மாக் விவகாரம்: ”அமலாக்கத்துறை எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது” – உச்சநீதிமன்றம்.!

சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…

1 hour ago

இந்திய U19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்.!

சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…

2 hours ago

”வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”- வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…

3 hours ago

”எனது உடலில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் ஓடுகிறது” – பிரதமர் மோடி.!

ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…

3 hours ago

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…

3 hours ago