சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான கோர சம்பவம்! நில உரிமையாளருக்கு ஜாமீன்!

Published by
மணிகண்டன்
  • மேட்டுப்பாளையத்தை சிவசுப்பிரமணியன் என்பது வீட்டு சுவர் டிசம்பர் 2ம் தேதி கனமழை காரணமாக இடிந்து விழுந்தது
  • இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிவசுப்ரமணியதிற்க்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி சிவசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீட்டை சுற்றியுள்ள 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரானது கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சுற்று சுவரை ஒட்டி இருந்த வீடுகளில் அந்த சுற்றுச்சுவர் விழுந்தது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து விடிந்த பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தையடுத்து வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வேண்டி மனு கொடுத்திருந்தார்.

அந்த மனுவில், கனமழை காரணமாக தன் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எந்தவித போலீசார் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன் என உறுதி கூறுகிறேன். என கூறப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஒரு லட்ச ரூபாய் பணத்தை பிணைத்தொகையாக கட்ட சொல்லியும், மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட சொல்லியும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago