durai murugan [file image]
துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக கட்சியின் சார்பாக நின்ற அபிநயா 10,602 வாக்குகள் பெற்றிருந்தார்.
காலையில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்த நிலையில், திமுகவின் வெற்றி உறுதியான காரணத்தால் இன்று, காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது முதல்வருடன் வந்த அமைச்சர் துரை முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு, அவர் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக்க இருக்கிறது .
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…