durai murugan [file image]
துரை முருகன் : திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் துரை முருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில், திமுக சார்பாக நின்ற அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பாமக சார்பில் நின்ற சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பிறகு 3-வது இடத்தில் நாதக கட்சியின் சார்பாக நின்ற அபிநயா 10,602 வாக்குகள் பெற்றிருந்தார்.
காலையில் இருந்தே திமுக முன்னிலையில் இருந்த நிலையில், திமுகவின் வெற்றி உறுதியான காரணத்தால் இன்று, காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது முதல்வருடன் வந்த அமைச்சர் துரை முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அதன்பிறகு, அவர் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாக்க இருக்கிறது .
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…