Union Minister Gajendra singh - TN Minister Duraimurugan [File Image]
காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறர் அமைச்சர் துரைமுருகன்.
காவிரி நதியில் இருந்து இந்த மாதம் (ஜூலை) கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கடந்த மாதம் குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஆலோசிக்கவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை டெல்லி புறப்பட்டார்.
அங்கு காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாய அதிகாரிகளை நேரில் சந்தித்து காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவாகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் கர்நாடக அரசு காவிரி நதி மூலமாக 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது. மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும் என கூறப்படுகிறது. ஆதலால் விரைவில் தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று இந்த சந்திப்பு டெல்லியில் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…