பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் – அனிதா சகோதரர்..!

Published by
murugan

பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர்  நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.  நீட் தேர்வு முறை அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் அனிதா, வருடத்திற்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். இந்த வாய்ப்பு ஜெயலலிதா ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவை மன்னிச்சிடாதீங்க. உங்கள் கையில் உள்ள விரல் மை எங்கள் வாழ்க்கை மறந்துறாதீங்க, திமுகவை மன்னிச்சிடாதீங்க என பேசுவது போல எடிட் செய்யப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த அனிதா குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், உங்கள் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  பிணத்தை உருவமாக செய்து ஒட்டு கேட்ட அரசியல்வாதி தானே நீங்கள், உங்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும். இந்த வீடியோவை பார்த்த பிறகு பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவிற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வீடியோவை தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago