BREAKING:அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்- உயர்நீதிமன்றம்.!

Published by
murugan
  • உயர்நீதிமன்றம் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
  • ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் எனவும் கூறிஉள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு,க.சார்பில் தற்போது அமைச்சராக உள்ள சரோஜா போட்டியிட்டார். திமுக சார்பில் திமுகவின் துணைப் பொதுச்செலயலாளராக உள்ள வி.பி.துரைசாமி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் அமைச்சர் சரோஜா 86,901 வாக்குகளும் , வி.பி.துரைசாமி  77,270 வாக்குகளும் பெற்றனர்.இதனால் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து தோல்வியடைந்த வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடர்ந்து இருந்தார்.

அதில் பணப்பட்டுவாடா மற்றும் அதிகாரதுஷ்பிரயோகம் செய்து தான் அமைச்சர் சரோஜா வெற்றிபெற்று உள்ளார்.எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் , மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. பின்னர் அமைச்சர் சரோஜா தனக்கெதிரான மனுவை நிராகரிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் அமைச்சர் சரோஜாவின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.பின்னர் இந்த வழக்கு இருதரப்பின் வாதங்களும் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் கேட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில் இன்று நீதிபதி பாரதிதாசன் வழங்கிய தீர்ப்பில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் என்றும் ,மனுதாரர் வி.பி.துரைசாமி தொடர்ந்த வழக்கில் முழுமையான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால் வி.பி.துரைசாமி தொடர்ந்த மனுவை முழுமையாக தள்ளுபடி செய்தார்.

 

 

 

Published by
murugan

Recent Posts

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

1 hour ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

1 hour ago

நாயகனை மிஞ்சியதா “தக் லைஃப்”! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…

2 hours ago

ஐபிஎல் ஓவர்…இன்று முதல் தொடங்குகிறது TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 9-ஆவது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர்…

3 hours ago

தீரா சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்…மன வேதனையில் விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18-வருடங்களுக்கு பிறகு கோப்பை வென்ற காரணத்தால் அதனை ரசிகர்கள் நேற்று கொண்டாடி தீர்த்தனர்.…

5 hours ago

முடிவுக்கு வருமா மோதல்? ராமதாஸை சந்திக்க தோட்டத்திற்கு செல்லும் அன்புமணி!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில்…

6 hours ago