KaveriHospital [FileImage]
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி.
அமலாக்கத்துறையால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கொண்டு பைபாஸ் சர்ஜெரிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என கோரிக்கை மனுவும் அளித்திருந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கையை ஏற்று, சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என அனுமதி அளித்துள்ளனர்.
மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது என்று கருதிய நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு வழங்கிய நிலையில், நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி நீடிக்கவேண்டும் எனவும், அமலாக்கத்துறை மருத்துவக்குழுவும் சிகிச்சியை ஆராயலாம் என்றும் உத்தரவு அளித்துள்ளனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதிலளிக்கவும், வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…