அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, காவேரி மருத்துவமனையில் இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை.!

Published by
Muthu Kumar

காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை என அமைச்சர் பேட்டி.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மற்றம் செய்ய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியின் பேரில், செந்தில் பாலாஜி நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் மற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு உடனடியாக அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து நேற்று காவேரி மருத்துவர்களுடன் ஆலோசித்ததில், அவருக்குள்ள ரத்த கசிவை நிறுத்திவிட்டு தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும், இது தொடர்பாக ஆராய்ந்துவிட்டு இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் கூறியதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ நிலை குறித்து ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து கூடவரட்டும் என அமைச்சரின் மனைவி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

கைதி 2 எப்போது ஸ்டார்ட்? எஸ்.ஆர். பிரபு சொன்ன முக்கிய தகவல்!

சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…

12 hours ago

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…

12 hours ago

“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!

ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…

14 hours ago

பொள்ளாச்சி வழக்கு 6.5 ஆண்டுகள்…ஞானசேகரன் வழக்கில் 157 நாளில்..இபிஸ்க்கு கனிமொழி பதிலடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

14 hours ago

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…

17 hours ago

தீர்ப்பு வரவேற்கத்தக்கது! யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? இபிஎஸ் கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…

18 hours ago