தமிழகத்தின் அடுத்த முதல்வர்..!அதிரடி காட்டும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்..!

Published by
Edison

தமிழகத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு.தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியில் அதிரடி காட்டும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணும் பணிகள் கடந்த மே 2ஆம் தேதி நடந்து முடிந்தது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே திமுக முன்னிலை வகித்து வந்தது.அதிமுக பின்னடைவையே சந்தித்தது.திமுக முன்னிலை வகித்து வந்த நிலையில் 158 இடங்களில் வெற்றி பெற்றது.அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

அதன்பின்னர்,தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே,5 முக்கிய திட்டங்களை அமல்படுத்தி அதிரடி காட்டினார்.

அந்தவகையில்,தமிழக முதல்வரின் மகனும்,சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி,தான் வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதியின்கீழ் உள்ள பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று களஆய்வு செய்து வருகிறார்.குறிப்பாக, புதுப்பேட்டை, கொய்யா தோப்பு என்னும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏனெனில்,அந்த பகுதி எப்பொழுதும் சாக்கடையாளும், நீராலும் சூழ்ந்து காணப்படுகிறது.திடீரென்று அந்த பகுதியை உதயநிதி ஆய்வு செய்தார்.அவ்வாறு ஆய்வு செய்ததில் மக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை கூறினர்.அதுமட்டுமல்லாமல்,மக்கள் கோரிக்கைகளை வீடு வீடாக சென்றும் உதயநிதி கேட்டறிந்தார்.மேலும்,அந்த கோரிக்கைகளை உடனடியாக மக்களுக்கு நிறைவேற்றியும் தந்தார்.

இதுகுறித்து,அப்பகுதி மக்கள் கூறியதாவது,”இதுவரை நேரடியாக எங்களை வந்து எந்த அமைச்சரும் சந்தித்ததில்லை.நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை எப்போதும் நிறைவேற்றியதும் இல்லை. ஆனால், எம்.எல்.ஏ உதயநிதி அவர்கள்,மற்ற அமைச்சர்களை போல் அல்லாமல்,நேரடியாக எங்கள் பகுதிக்கு வருகை புரிந்து,எங்கள் கோரிக்கைகளை கேட்டு அனைத்தையும் உடனடியாக செயல்படுத்தி கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.அதுமட்டுமின்றி உதயநிதி அவர்கள் எங்களுக்கு ஹீரோ போல காட்சியளிக்கிறார்.மேலும்,அப்பாவை போன்று மக்களின் குறைகளை தீர்த்து வருவதால் இவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார்”,எனக் கூறினர்.

Published by
Edison

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

20 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

60 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago