உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் ,உள்ளாட்சித்துறை டெண்டர் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.நவம்பர் 1-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேலுமணி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து அமைச்சர் வேலுமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் அரசியல் ஆதாயத்திற்காகவும்,உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை டிசம்பர் 18-ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பித்தது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…