கலைஞரைப் போல உலக தமிழர் இதயங்களில் மு.க.ஸ்டாலின் இடம்பிடிப்பார் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், பின்தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்து சென்று தமிழ் மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்வார் என்றும் சிறந்த முதல்வராக செயல்படுவார் எனவும் கூறியுள்ளார். முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலைஞரை போல் உலக தமிழர் இதயங்களில் முக ஸ்டாலினும் இடம்பிடிப்பார் என்றும் மாநிலங்களில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது, மத்தியில் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது என்பது கடந்த காலங்களில் இந்திய நாட்டின் ஜனநாயகத்தோடு சிறப்பம்சம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வரும் 7ம் தேதி முதல்வர் பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின், நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன், முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…