இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.!

Published by
கெளதம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினார்.

இம்மானுவேல் சேகரன் 1924 ம் ஆண்டு அக்டோபர் 9 ம் தேதி பிறந்தார். அவரை 1957ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் இன்று அவரது 63 ஆவது நினைவு நாள்.

இவரது நினைவு நாளை முன்னிட்டு பலர் தங்களுது நினைவஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அந்த அவகையில், இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு தனது  18-வது வயதில் கைதாகி – தாய்த் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர் -வீரர் திரு. இம்மானுவேல் சேகரன்.அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உரிமை தாகத்துடன் இருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாள்

தேவேந்திர குல வேளாளர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அவருக்கு, 2010-ல் கழகம் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பு – மத்தியில் கூட்டணியில் பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தபால் தலை வெளியிடப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தக்கதொரு தீர்வை விரைவில் கண்டிட வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் – மத்திய அரசையும் தொடர்ந்து தி.மு.க. வலியுறுத்தும் என்ற உறுதியை வீரர் நினைவு தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. இம்மானுவேல் சேகரன் புகழ் என்றும் நிலைத்தோங்கி நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

9 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

10 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

11 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

11 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

12 hours ago