முதல்வர் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
வருகின்ற 7ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 133 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். அப்போது, சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக முக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க முக ஸ்டாலின் உரிமை கோரியுள்ளார். இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கினார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநர் மளிகை சென்றிருந்தனர்.
இந்த நிலையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்தடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் முக ஸ்டாலின் வழங்கினார் என்றும் பதவி ஏற்புக்கான அழைப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஆளுநர் கூறினார் எனவும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…