MKStalin: மெட்ரோ பணிகளை நிறுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி – நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய 9 துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

வடகிழக்கு பருவமழை குறித்து முந்தைய ஆண்டுகளின் அனுபவங்களை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகள், அடைப்புகளை அகற்றும் பணிகள், நீர்நிலைகள் கால்வாய்கள், தடுப்பணைகளின் கதவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மின்வாரிய பணிகளுக்கும் சாலையில் பள்ளம் தோண்டக்கூடாது. மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்குள் சென்னையில் பழுதான சாலைகளை சரி செய்யும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

9 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

9 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

10 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

10 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

11 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

12 hours ago