பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் கமல் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி, அதிமுக ஓட்டை பிரிக்க பார்க்கிறார். அவர் திமுகவின் கைக்கூலி, பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன். அவரை பார்த்து பயப்பட வேண்டாம். இந்த தேர்தலில் வானதி சீனிவாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார். கம்யூனிஸ்டுகள் பல காரணங்களுக்காக திமுக கூட்டணியில் இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்.
மேலும் அவர் கூறுகையில், மோடியும் அமித்ஷாவும் மிகப் பெரிய அறிவாளிகள். ஆனால் மிகவும் சாதாரணமானவர்கள். வாழ்வில் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் 24 மணி நேரமும் உழைப்பவர்கள் என்று அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் தான் நமது மண்ணில் இருக்கும் அந்நியர்களை இனம் கண்டுகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…