ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முக ஸ்டாலின், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பரப்புரையை தொடங்கவுள்ளேன் என்றும் கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும். திமுகவுக்கு அண்ணா மற்றும் கலைஞர் என இரண்டு பலம் உள்ளது. நான் என்பதை விடுங்கள், நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். இதையும் மீறி 6-வது முறையாக வெற்றி பெற வேண்டும். பணமா? மக்கள் மனமா? என்ற நிலையை மாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும். பணத்தை வெல்லும் ஆற்றலை மக்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…