திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோவையில் அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 74 வட்டம் கலைஞர் நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக செயலாளர் எஸ்எம்.சாமி, வட்டக்கழக செயலாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ பேசுகையில், கோவை மாநகராட்சி முழுவது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேட்டின் பகுதியாக கோவை உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பல நோய்கள் பரவ கூடிய உள்ளது எனவும், மாநகராட்சியின் பணிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் எஸ்பி.அன்பரசின் தலையீடு இதில் உள்ளது, இதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநகராட்சியின் இதுபோன்ற செயல்களை கண்டித்து 11-3-20 அன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சியின் மெயின் அலுவலகத்தை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

19 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

33 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

1 hour ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago