வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் கணவர்,உறவினர்கள் மீது கொலை வெறி தாக்குதல்.!

Published by
murugan
  • உள்ளாட்சி தேர்தலில் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார்.
  • நேற்று இரவு  பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் அமைந்து இருந்த கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோரை மர்ம கும்பல் தாக்குதல்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம்  திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று இரவு  பாண்டியம்மாளின் வீட்டு வாசலில் கணவர் ஞானசேகரன், உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர் .

அப்போது  3 கார்களில் அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 3 பேரையும் அரிவாள் மற்றும் கம்புகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில்  படுகாயம் அடைந்த 3 பேரும் முதலில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Published by
murugan

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago