கமுதி அருகே பரபரப்பு ! ஆடு மேய்ந்ததால் அரிவாள் வெட்டு – 20 பேர் படுகாயம், ஒருவர் பலி

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் பாடாய் படுத்தி வரும் நிலையில் ஒரு ஆடு விளைச்சல் நிலத்தில் மேய்ந்ததால் 20 பேர் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்தும், ஒருவர் உயிரிழந்த வருந்ததக்க சம்பவம் குறித்த  செய்தி தான் இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தின்  ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு  அருகே உள்ள ஆசூர்  கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது  மகன் முனியசாமி. இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

சம்பவ நாளன்று வழக்கமாக ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். மேய்ச்சலின் போது கடும் வெயிலின் தாக்கத்தினால் சோர்வடைந்த முனியசாமி சற்று இளைப்பாற  அப்பகுதியில் இருந்த மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளார். அந்நேரத்தில் வயல்காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அருகில் இருந்த பாண்டி என்பவரது பருத்திக் காட்டில் புகுந்து பருத்திச் செடிகளை மேய்ந்துள்ளது. இதைக்கண்ட அந்த காட்டின் உரிமையாளர்  பாண்டியும் அவரின் மகன் ஆனந்தும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த முனியசாமியைத் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் ஆட்டுக்காரர் முனியசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின், ரத்தக் காயத்துடன் வந்த முனியசாமியைக் கண்ட அவரது உறவினர்கள் பாண்டியைத் தேடிச் சென்றுள்ளனர். அங்கு பாண்டி தரப்பிற்க்கும், முனியசாமி தரப்பிற்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில்  அரிவாள், கத்தி, கம்புகளால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் பாண்டி தரப்பில் 6 பேருக்கும், முனியசாமி தரப்பில் 14 பேருக்கும் பலத்த காயமடைந்தது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த திருமால் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருமால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்  தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர்  இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரெங்கும் கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், பருத்திச் செடியை ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட மோதலில் பலரும் வெட்டுக் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

48 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

58 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago