எல் முருகனுக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அரியலூரில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றும் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என பேட்டியளித்திருந்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலர் எல் முருகனுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறிருந்தது குறித்த கேள்விக்கு, அவருக்கு பேச்சுரிமை உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் என மயிலாடுதுறையில் அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…