திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.884 கோடி வழங்கப்பட்டுள்ளது என பேசிய முதல்வர், அதிகாரம் இருந்த போது திமுக மக்களுக்களிடம் மனு வாங்கவில்லை என்றும் இப்போது மேடையில் பெட்டி வைத்துக் கொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் எனவும் கூறியுள்ளார். திமுக மக்களை ஏமாற்றி வருகிறார்கள், ஒரு ஐந்து முறை ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வர், உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது ஏன் திட்டங்களை நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
திமுகவினரை கண்டாலே மக்களுக்கு அலர்ஜி. அப்படிப்பட்ட கட்சி தான் திமுக. சட்ட ஒழுங்கு பேணி காப்பதில் தமிழகம் முதலிடம். இதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் ஸ்டாலின். அதிமுக ஜனநாயக கட்சி கீழே இருக்கின்றவர்கள் கூட முதல்வராக முடியும். திமுக கட்சியில் வரவே முடியாது. வாரிசு அரசியல் செய்கிறார்கள், கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்கிறார்கள் என குற்றசாட்டினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம். இவர் அதிமுகவை குறித்து குற்றம் கூறி பிரச்சாரம் செய்கிறார். என் அனுபவம் தான் உதயநிதி ஸ்டாலின் வயது, அவர் அதிமுகவை பற்றி பேசுவதா?. தற்போது திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார். அந்தளவு திமுக படும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இன்று மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி தொடங்கவில்லை, குடும்பத்துக்கு நல்லது செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி என விமர்சித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…