எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசுகையில் , என்னை வளர்த்தவர் எம்ஜிஆர் . என் தலைவர் கருணாநிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும்.திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன் என்று பேசினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…