இன்று ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும் முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். இந்த சட்டத்தால் யாரும் பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.
விஜயகாந்த் மற்ற கட்சி தலைவர்களுக்கு உதாரணமாக உள்ளார். அதற்கு சான்று விஜயகாந்த் திரைப்படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏழை ,எளிய மக்களுக்கு தானமாகவும் , பொருட்களாகவும் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் தயாராகி விட்டார்கள். தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா…? அல்லது தனித்து போட்டியா…? என இப்போதே சொல்ல முடியாது என கூறினார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…