நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மறைவு.! முதல்வர் இரங்கல்.!

Published by
மணிகண்டன்

Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் இன்று உடல்நல குறைவால் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (மே 14) காலையில் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லி பகுதியை சேர்ந்த M.செல்வராஜ், சிறு வயது முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர், 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.

அதன் பிறகு, 1996, 1998 மற்றும் கடந்த 2019 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பியாக பொறுப்பில் இருந்துள்ளார். இந்த முறை 2024 தேர்தலில் செல்வராஜ் போட்டியிடவில்லை.

ஏற்கனவே, முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராஜ் அவர்களுக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை  காலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சுத்தமல்லியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது .

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :

நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும் டெல்டா மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

2 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

3 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

4 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

6 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

6 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

7 hours ago