நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி செல்வராஜ் மறைவு.! முதல்வர் இரங்கல்.!

Published by
மணிகண்டன்

Nagapattinam M.P : நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான எம்.செல்வராஜ் இன்று உடல்நல குறைவால் சென்னை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் நாளை (மே 14) காலையில் நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சித்தமல்லி பகுதியை சேர்ந்த M.செல்வராஜ், சிறு வயது முதலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பல்வேறு சிறு சிறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு பின்னர், 1989ஆம் ஆண்டு முதன் முதலாக நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார்.

அதன் பிறகு, 1996, 1998 மற்றும் கடந்த 2019 தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாகை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 4 முறை எம்.பியாக பொறுப்பில் இருந்துள்ளார். இந்த முறை 2024 தேர்தலில் செல்வராஜ் போட்டியிடவில்லை.

ஏற்கனவே, முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட செல்வராஜ் அவர்களுக்கு, அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். இவரது நல்லடக்கம் நாளை  காலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சுத்தமல்லியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது .

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :

நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும் டெல்டா மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

3 minutes ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

1 hour ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

2 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

3 hours ago

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…

4 hours ago