நீட் கடுமையான தேர்வு தான்…! மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு கடினமான தேர்வு தான். அதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது.
நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இந்த தேர்வானது 13 மொழிகளில் 198 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் மட்டும் இந்த நீட் தேர்வை 1,10,921 எழுதுகின்றனர். இதில் 40,376 மாணவர்களும், 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் எழுதுகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு கடினமான தேர்வு தான். அதற்காக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது.
குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என்றும், நாளை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துள்ள நிலையில், அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025