திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் கொண்டு வரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 பேர் தற்கொலை செய்த நிலையில், நீட் தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வுகள் கொண்டு வரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியல் இருந்தபோது தான் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அன்றைக்கு மவுனமாக இருந்தது திமுக என கூறிய அவர், இன்றைக்கு திமுக, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…