புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் சிறப்பாக கொண்டாடப்படும்.இந்த வகையில் இந்த ஆண்டும் இதற்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது.இதையொட்டி சென்னை போலீஸ் சார்பில் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சுமார் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
முக்கிய சாலைகளான மெரினா,சாந்தோம் ,காமராஜர் சாலை ,எலியட்ஸ் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகன ரசிங் ,குடிபோதையில் தகராறு ஆகியவற்றை கண்காணித்து தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள்.குடி போதையில் சிக்குபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…