நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பிரசிங் மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என கூறிய நிர்மலா சீதாராமன் கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்து உள்ளது. இதனால், நமது கருத்தை மக்களிடம் தெரிவிக்க முடிகிறது. தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி தற்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனையளிக்கிறது. திமுக தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது காங்கிரஸ் கட்சி;ஆனால் இன்று திமுக காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறிய அவர் விநாயகர் சிலை குறித்தும் அதில் பேசுகையில் சீனாவை இந்தியா அதிகமாக நம்பியிருப்பதை குறைத்து, மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும் வேலை வாய்ப்புகளை வழங்க உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை ஆனால் சீனாவிலிருந்து விநாயகர் சிலைகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது ஒன்றும் தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் அதில் கேள்வி எழுப்பினார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…