ஏன்? சிலையைக்கூட இறக்குமதி? நம் நாட்டில் இல்லையா?? நிர்மலா சுளீர்

Published by
kavitha

நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பிரசிங் மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம்  உரையாற்றினார். அப்போது தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என கூறிய  நிர்மலா சீதாராமன் கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்து உள்ளது. இதனால், நமது கருத்தை மக்களிடம் தெரிவிக்க  முடிகிறது. தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.

பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி தற்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனையளிக்கிறது. திமுக தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது காங்கிரஸ் கட்சி;ஆனால்  இன்று திமுக  காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறிய அவர் விநாயகர் சிலை குறித்தும் அதில் பேசுகையில்  சீனாவை இந்தியா அதிகமாக நம்பியிருப்பதை குறைத்து, மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும் வேலை வாய்ப்புகளை வழங்க  உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை ஆனால் சீனாவிலிருந்து விநாயகர் சிலைகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது  ஒன்றும் தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் அதில் கேள்வி எழுப்பினார்.

Published by
kavitha

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

15 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

16 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago