மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதால் முடிவடைய இருந்த ஊரடங்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டு இருப்பதால் ஊரடங்கை மே ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு (நாளை) ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று கூறினார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என்றும் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 20க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய ஆலோசனைகளை முதல்வர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்க உள்ளனர். இந்த ஆலோசனை குறித்து முதல்வர் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளார். இதனால் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போது உள்ள கட்டுபாடுகள் அனைத்தும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…