விஜய் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது. உண்மையான அரசியல் கருத்துக்களை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது. அப்படி இல்லை என்றால் அவருடைய மனசாட்சி அவரை குத்தும் என்று கூறினார்.மேலும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025