கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாத காரணத்தால் மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.

இனியாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பே அனைத்து நீர்நிலைகளை தூர்வாரபட வேண்டும். கடந்த 6 மாதமாக தமிழகத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. சேதங்கள் குறித்து மாநில அரசு உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.

மாநில அரசு கோரும் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சார்பாகவும், அதிமுக சார்பாகவும் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

8 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

9 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

10 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

10 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

12 hours ago