Tamilnadu Weather - Chennai fog [File Image]
இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதோடு சேர்த்து தற்போது பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.!
தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும் எனவும் , 16 , 17ஆம் தேதிகளில் கடும் குளிர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையானது தமிழகத்திற்கு இந்த வருடம் நல்ல மழையை கொடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில். தற்போது காற்று வீச இன்னும் துவங்கவில்லை. அதன் காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதிகபட்சமாக, வட தமிழகம் , டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். தலைநகர் சென்னையில் காலை 9 வரையில் சாலைகள் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டமாக காணப்படும். 9 மணிக்கு பிறகுதான் சாலைகள் தெளிவாக தெரியும் வண்ணம் இருக்கும். இதனால் சென்னை மெரினா உள்ளிட்ட பிரதான சாலைகள் வாகனங்கள் தெரியாத வண்ணம் பனிமூட்டம் நிலவுகிறது. வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் குளிர் இந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…