கடும் பனிமூட்டத்தில் சிக்கி தவிக்கும் சென்னை.! அடுத்த 2 நாட்களுக்கும் இது தொடரும்…

Published by
மணிகண்டன்

இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதோடு சேர்த்து தற்போது பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.!

தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும் எனவும் , 16 , 17ஆம் தேதிகளில் கடும் குளிர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையானது தமிழகத்திற்கு இந்த வருடம் நல்ல மழையை கொடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில். தற்போது காற்று வீச இன்னும் துவங்கவில்லை. அதன் காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிகபட்சமாக, வட தமிழகம் , டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். தலைநகர் சென்னையில் காலை 9 வரையில் சாலைகள் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டமாக காணப்படும். 9 மணிக்கு பிறகுதான் சாலைகள் தெளிவாக தெரியும் வண்ணம் இருக்கும். இதனால் சென்னை மெரினா உள்ளிட்ட பிரதான சாலைகள் வாகனங்கள் தெரியாத வண்ணம் பனிமூட்டம் நிலவுகிறது. வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் குளிர் இந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

11 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

12 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

12 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

13 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

13 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

14 hours ago