2 வழக்குகள் அல்ல,2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை- மு.க.ஸ்டாலின்

Published by
Venu

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் 2 வழக்குகள் அல்ல ,2000 வழக்குகள் தொடர்ந்தாலும் கவலைப்படப்போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

முரசொலி பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட  நல்லாட்சி  விருது குறித்து கருத்து கூறினார்.மேலும் முரசொலி நாளிதழில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் கருத்து தெரிவித்து இருந்தார்.இது மட்டும் அல்லாமல்

திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாஜக கூட்டணியில் உள்ள  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி எதிர்த்துக் கொண்டு வருகிறார். ஆகையால் இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த ஆட்சி என்று பேசினார். மேலும் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று  பேசினார்.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் கௌரி அசோகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், தமிழக அரசு நல்லாட்சி விருது கிடைத்தது குறித்தும், குடியுரிமை திருத்த  சட்டம் தொடர்பாக ஸ்டாலினை பேசியது தமிழக அரசுக்கும்,முதலமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் ஸ்டாலின் அவதூறு சட்டத்த்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,இரண்டு நாட்களுக்கு முன் என் மீது 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.2 வழக்குகள் என்ன,2000 வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி கவலைப்படப்போவதில்லை . திமுகவினர் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் . மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று பேசினார்.

Published by
Venu

Recent Posts

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

27 minutes ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

53 minutes ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

2 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

2 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

4 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

5 hours ago