திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது
திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, நாகர்கோவிலுக்கு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி புறப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக ( 50 சதவீதம்) உள்ளதால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
முதல் நாளில் பின்பற்றப்பட்ட சமூக இடைவெளியானது, 2,3 ஆம் நாட்களில் காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால், வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. இதனை அதிகார்கள் கண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் விருப்பம்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…