இப்போ எல்லாம் ஓல்ட்., நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் வருவோம் – அர்ஜூன மூர்த்தி அதிரடி

Published by
பாலா கலியமூர்த்தி

இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்று புதிய கட்சி தொடங்கவுள்ள அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

ரஜினி புதிதாக தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனன் மூர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் என்று புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அர்ஜுனன் மூர்த்தி தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சி தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மனிதர்களை மனிதராக பார்க்கும் அரசை என்னைக்கு நாம் அமைக்கிறோமோ அன்றைக்கு தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும். தற்போது நாம் உண்மையான சுதந்திரத்தில் இல்லை. நல்ல சுதந்திரம் வேண்டும். அப்போ நமக்கு ஒரு நல்ல அமைப்பு, நேர்மை, நாணயம் உள்ள மனிதர்களை சீர்நோக்கி பார்க்க வேண்டும். அவர்களுக்கு உதவிகளை செய்து, கண்டிப்பாக 2021 தேர்தலில் ஒரு மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு மட்டுமில்லாமல், இந்தியாவுக்கே தமிழகம் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். அதனால், நீங்கள் அதற்கு துணை இருக்க வேண்டும் என்றுதான் என்னுடைய வேண்டுதல். நிச்சியமாக ஒரு மாற்று கருத்து தேவையாக இருக்கு. ஒரு மரம் தோப்பாகாது, என்னால் மட்டும் ஒரு அரசில் அமைப்பு பண்ணமுடியாது. அதற்கான நண்பர்களை சேர்த்து, ஒரு அரசியல் கட்சி நிறுவனம் என்பதில் எனக்கு மிகப்பெரிய ஆர்வமும், ஆசையும் இருப்பதால், வெகு விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து, ஒரு சிறப்பான அரசியல் கட்சியை தொடங்குவேன். இன்னும் ஒருவாரத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருக்கிறேன். எனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் முற்றிலும் பாஜகவுக்கு மாற்றாகவே இருக்கும். ரஜினியின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ என் கட்சியில் பயன்படுத்த மாட்டேன். ரஜினி ரசிகர்கள் என் கட்சியில் இணைந்து பணியாற்றலாம்’என்றும் அழைப்பு விடுத்தார். இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட் மற்றும் அம்பாசிடர் கார்கள் போன்றவை. டிரைவர்கள் மட்டுமே மாறுவார்களே தவிர கார்கள் அப்படியே தான் இருக்கும். நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் தமிழக அரசியலில் வலம் வருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

2 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

2 hours ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

3 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

3 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

4 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

4 hours ago