சென்னையில் உள்ள பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சீக்கிரமாக செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் உதவியாக உள்ளது. டிராபிக் பிரச்சனை இல்லாமல் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயிலை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எங்குவேண்டுமெனாலும் செல்ல எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. முதற் கட்டமாக கிண்டி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
இந்த திட்டத்தை வோகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 20 ரூபாய் கொடுத்து புக்கிங் செய்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவு செய்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் 10 மணிநேரத்திற்கு மேல் வாகனத்தை பயன்படுத்தினால் 1 மணி நேரத்திற்கு கூடுதலாக ரூ.36 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…